முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-ஆம் ஆண்டு நினைவுநாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே உள்ள இந்திரா காந்தியின் உருவச் சிலைக்கு மாவட்டத் தலைவர் ரூபி மனோகரன் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவது என காங்கிரஸார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட எஸ்சி-எஸ்டி பிரிவு தலைவர் அய்யப்பன், வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் சேட்டு ஏழுமலை, நகர துணைத் தலைவர்கள் பக்கிரிசாமி, செல்வம், பொருளாளர் வாசுதேவன், நிர்வாகிகள் ராஜ்குமார் புண்ணியநாதன், நிக்கோலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.