கார் - ஆம்புலன்ஸ் மோதல்: பெண் சாவு; 8 பேர் காயம்

செங்கல்பட்டு -தாம்பரம் நெடுஞ்சாலையில் கார் - ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

செங்கல்பட்டு -தாம்பரம் நெடுஞ்சாலையில் கார் - ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
செங்கல்பட்டு ஜே.சி.கே. நகர், தென்றல் தெருவைச் சேர்ந்தவர் குமரகுரு (55). இவர், தனது மனைவி விஜயலட்சுமி (50), மகன் புகழேந்தி (25) ஆகியோருடன் தாம்பரத்துக்கு காரில் திங்கள்
கிழமை சென்றனர். காரை புகழேந்தி ஓட்டினார்.
செங்கல்பட்டு பழையபேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்றபோது, மறைமலை நகர் சாமியார்கேட் பகுதியில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் மோதிக் கொண்டன. 
இதில், விஜயலட்சுமி (50) சம்பவ இடத்திலேயே இறந்தார். குமரகுரு, புகழேந்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான காஞ்சிபுரம் தண்டலம் கிராமம் காயரம்பட்டு பகுதியைச் சேர்ந்த லோகநாதன், மருத்துவ உதவியாளர் கவிநிலா, சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பூங்கோதை(57), பார்வதி(37), விஜயலட்சுமி(17), துரைசாமி ஆகியோரும் காயமடைந்தனர். 
இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு நகரக் காவல் ஆய்வாளர் லாமேக் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று காயமடைந்த 8 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com