காஞ்சிபுரம் அருகே கார் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சேகர் (40 ). இவர் தனது நண்பர் அன்புவுடன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஆரியப்பெரும்பாக்கம் இணைப்புச்சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் 108 ஆம்புலன்ஸில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழியிலேயே சேகர் உயிரிழந்தார். அன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.