மாமல்லபுரத்தில் அதிகபட்ச மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் நகர்ப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதன்கிழமை நிலவரப்படி, பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): காஞ்சிபுரம் 18.3 மி.மீ., செங்கல்பட்டு 29 மி.மீ., மதுராந்தகம் 59 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர் 8.3 மி.மீ., தாம்பரம் 15 மி.மீ., திருக்கழுகுன்றம் 39.4 மி.மீ., மாமல்லபுரம் 98 மி.மீ., கேளம்பாக்கம் 23. 8, உத்தரமேரூர் 72 மி.மீ., செய்யூர் 11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 37.39 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com