காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியதாக 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சிறுதாமூர் பாலாற்றுப் பகுதியில் சிலர் லாரிகளில் மணல் கடத்துவதாக சாலவாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த லாரி, மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட கிரேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநர் சங்கராபுரத்தைச் சேர்ந்த ராஜி (35), கிரேன் உரிமையாளர் மதூர் கோபால் (52), ஓட்டுநர் விநாயகம் (21) ஆகியோரை கைது செய்தனர்.