காஞ்சிபுரம் அருகே புக்காதுரை ஏரியில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
சாலவாக்கம் ஊராட்சி புக்காதுரை ஏரியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் மிதப்பதை அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து புக்காதுரை கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்த புகாரின்பேரில் சாலவாக்கம் போலீஸார், இளைஞரின் சடலத்தை மீட்டனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.