திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு கோட்டத்துக்கு புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்போரூர் வட்டம் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் அக்டோபர் 25-ஆம் தேதி சூரசம்ஹாரம் விழா நடைபெறவுள்ளது.
இதனைமுன்னிட்டு செங்கல்பட்டு கோட்டம், செங்கல்பட்டு வட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் மட்டும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என அதில் தெரிவித்துள்ளார்.