உலக புற்றுநோய் தினத்தையொட்டி, புதன்கிழமை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பூபதி தலைமை வகித்தார். டாக்டர்கள் பாஸ்கர், வள்ளியரசி, உதவி மருத்துவ அலுவலர் தீனதயாளன், செல்வராஜ், டாக்டர் கற்பகவள்ளி உள்ளிட்ட மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர். செவிலியர்கள், நர்சிங் மாணவமாணவிகள் கலந்துகொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாகசங்கள் அடங்கிய பதாகைகள், அட்டைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் ராட்டிணங்கிணறு அருகில் தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணி ஜிஎஸ்டி சாலை வழியாக அரசு மருத்துவமனையை வந்தடைந்தது.