செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி அருகில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
கூடுவாஞ்சேரி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31) வீட்டைப்பூட்டி விட்டு செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்குச் சென்று திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 3.5 சவரன் நகை 3 ஜோடி வெள்ளி கொலுசுகள் ரொக்கம் ரூ. 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.