மகா சிவராத்திரியை முன்னிட்டு, மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரி திரு வி.க. நகரில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் புதன்கிழமை 508 பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
முதல் நாளான புதன்கிழமை மதுராந்தகம் கடப்பேரி பொன்னியம்மன் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க 508 பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை (பிப்ரவரி 15) மயான கொள்ளை, தீமிதி உற்சவம், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை அங்காளம்மன் வார வழிபாட்டு மன்றத்தினர், நிர்வாக குழுவினர் ஆகியோர் செய்துள்ளனர்.