மேல்மருவத்தூர் ஏரிக்கரையில் சிமெண்ட் சாலை அமைப்பு

மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிக்கரையை பலப்படுத்தி ரூ. 8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை  மாவட்ட ஆட்சியர் பொன்னையா வியாழக்கிழமை திறந்து வைத்தார். 

மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிக்கரையை பலப்படுத்தி ரூ. 8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை  மாவட்ட ஆட்சியர் பொன்னையா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப் பயிற்சி செல்லவும், ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களுக்கு  எளிதில் செல்லவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்,  துணைத் தலைவர் கோ.ப. அன்பழகன், கோ.ப. செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஊராட்சி மன்றச் செயலர் செந்தில் குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com