ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பௌர்ணமி பூஜை

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்தில் புத்தாண்டு மற்றும் மார்கழி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு, சத்ய நாராயணா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்தில் புத்தாண்டு மற்றும் மார்கழி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு, சத்ய நாராயணா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
 இந்த பூஜையையொட்டி கருங்குழி, ராகவேந்திரா பிருந்தாவன வளாகத்தில் உள்ள சத்யநாராயணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர் ஆகியோர் சந்நிதிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 இதில், நண்பகல் 12 மணிக்கு, பிருந்தாவன தவயோகபீடத்தில் இருந்துவரும் ரகோத்தம சுவாமி மேளதாளம், பஜனை கோஷ்டியினர் புடைசூழ ஊர்வலமாக வந்து சத்தியநாராயணா பூஜையை செய்தார். பின்னர் "சாதனை படைத்த சரித்திர நாயகி புரட்சித்தலைவி அம்மா' என்ற நூலை ரகோத்தம சுவாமி வெளியிட்டதை ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீகவி பெற்றுக்கொண்டார்.
 நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ஏழுமலைதாசன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com