உத்தரமேரூர் கூட்டுறவுக் கடன் சங்க நிகர லாபம் நிகழாண்டின் ரூ. 3.15 கோடியாக உள்ளது.
உத்தரமேரூர் கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில், அதன் 111-ஆவது பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் வி.ஆர்.அண்ணாமலை தலைமை வகித்தார். முன்னாள் செயலர் ஸ்ரீதர் வரவேற்றார். முன்னாள் சங்கச் செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம் நிர்வாக அறிக்கையும், கடந்த ஆண்டின் நிகர லாபத்தையும் விளக்கிக் கூறினார். அத்துடன், நிகழாண்டின் நிகர லாபம் ரூ. 3கோடியே 15 லட்சத்து 56,977 ஆக உள்ளது. இக்கூட்டத்தில் 'அ' வகுப்பு உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சங்கச் செயலாளார் எம்.உமாதேவி நன்றி தெரிவித்தார். உதவிச் செயலர் (பொறுப்பு) ஆதிசேஷன், நகை மதிப்பீட்டாளார் ஆ.ஜெகதீசன், இயக்குநர் கே.முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.