மாமல்லபுரம் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள அறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ.ச.கணேசன் தலைமை வகித்தார். இயக்குநர் அனுராதா கணேசன் முன்னிலை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் பொன்ன வைக்கோ சிறப்புரையாற்றினார்.
முதல்வர் பி.சங்கர் வரவேற்றார். கல்லூரிகளின் குழுமத் தலைமைப் பொறுப்பாளர்கள் சீனிவாசன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி நிர்வாகிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் டி.விஜயேந்திர பாபு
நன்றி கூறினார்.
சங்கரா பல்கலை.யில்...
காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியில், பயன்பாட்டுத் துறை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழகப் பதிவாளார் ஸ்ரீனிவாசு, முதன்மை நிர்வாக அதிகாரி ஜி.ராமசந்திரன் ஆகியோர் தலைமை விகித்தனர். டீன் பாலாஜி, பேராசிரியர் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு சிலம்பம், கயிறு இழுத்தல், உறியடி, பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.