ஜன.25-இல்  முன்னாள் படைவீரர்  குறைதீர் முகாம்

காஞ்சிபுரத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு ஜனவரி 25-ஆம் தேதி சிறப்பு குறைதீர்முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு ஜனவரி 25-ஆம் தேதி சிறப்பு குறைதீர்முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆட்சியர் தலைமையில் முன்னாள், இந்நாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோருக்கு  ஜனவரி 25-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. 
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் வந்து தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com