மரக்கன்றுகள் நடும் விழா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் நந்தவனத்தில் நட்சத்திர மரக்கன்று நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் நந்தவனத்தில் நட்சத்திர மரக்கன்று நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் சுமார் 2 ஏக்கர் நிலம் உள்ளது. 
இதில், பொதுமக்கள் அவரவர் ராசிக்கேற்றபடி நட்சத்திர மரங்களை நட்டு, வழிபட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வேடந்தாங்கல் சமூக ஆர்வலர் வெங்கடேசன் செய்திருந்தார். 
நிகழ்ச்சிக்கு, மதுராந்தகம் டி.எஸ்.பி. என்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 
காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். 
இதில் பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு, நட்சத்திர மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com