முதியவர் விஷம் குடித்து சாவு

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியில் முதியவர் ஒருவர் விஷம் குடித்து இறந்தார் . 

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியில் முதியவர் ஒருவர் விஷம் குடித்து இறந்தார் . 
காயரம்பேடு பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் பலராம் (90). அவர் கடந்த 15ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
அங்கு பலராம் வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com