செங்கல்பட்டில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

செங்கல்பட்டில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, மாவட்ட பொதுச்செயலாளர் டி.ஜெயராமன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.குமரவேல், முன்னாள் தலைவர் வி.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அசோக்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.ஜெயவேல், சி.வி.வி.ஜெயவேலு, சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஏ.ரியாஸ் பாய் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பழவேலி காமராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில், மத்திய பாஜக அரசுக்கும், ஹெச். ராஜாவுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய, களப் பணியில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.பார்த்தசாரதி, சிவாஜி சீனிவாசன், ராஜேந்திரன், ஏழுமலை, சுரேஷ், வெங்கட்ராமன், மனோகர், குனா, விஜயகுமார், பாபு உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். கே.பாஸ்கர் நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com