காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மக்கள் சக்தி சங்கத்தினர் புதன்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.பாபு தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள், மண்ணு, வேலன், மலைராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் நிறைவாக, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலர் வாலாஜாபாத் கணேசன் முடித்து வைத்தார். இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.