மூன்று பெண்களிடம் சங்கிலி பறிப்பு முயற்சி

காஞ்சிபுரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளான, திம்மராஜம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் சங்கிலியைப் பறிக்க முயற்சி செய்தனர். அதுபோல், கருக்குப்பேட்டை பகுதியில் மற்றொரு பெண்ணிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சங்கிலியைப் பறிக்க முயற்சித்தனர். அப்போது, அப்பெண் எச்சரிக்கை அடைந்து கழுத்தில் இருந்த நகையை இறுகப்பற்றிக் கொண்டார். இதனால், அப்பகுதியினர் சிலர் மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
 காஞ்சிபுரம், பெரியார் நகரில் வசித்து வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். எனினும், அது கவரிங் நகையாகும். இந்த மூன்று சம்பவங்களும் புதன்கிழமை மாலை சில மணி நேரத்துக்குள்ளாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
 இதையடுத்து, போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டதோடு, மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com