கஜா புயலையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 92 மி.மீ. மழை பதிவானது.
கஜா புயல் தாக்கத்தால் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்களும் கனமழை பெய்தது. காஞ்சிபுரம், முத்தியால்பேட்டை, சின்ன காஞ்சிபுரம், ஏகனாம்பேட்டை, வாலாஜாபாத், செவிலிமேடு, ஓரிக்கை, உத்தரமேரூர், பழையசீவரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து, கஜா புயல் கரையைக் கடந்து சென்றது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளான மாமல்லபுரம், செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பெய்தது.
இதில், அதிகபட்சமாக செங்கல்பட்டில் 92 மி.மீ. மழை பதிவானது.