பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

திருவண் ணாமலை, வேங்கிக்கால் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

Updated On :24 ஜூலை 2017, 8:54 am IST

திருவண் ணாமலை, வேங்கிக்கால் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
கூட்டத்துக்கு  வாசகர் வட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியர் பலராமன் முன்னிலை வகித்தார். புதிய பார்வை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கிளை நூலகர் சரஸ்வதி, நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து, காமராஜரின் புகழ் குறித்து புலவர் கோவிந்தசாமி, வேதாத்திரி மகரிஷியின் மகிமைகள் குறித்து சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மனவளக்கலை மன்ற நிர்வாகி சந்திரசேகர், வருவாய்த் துறை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், திருவண்ணாமலை டவுன்ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார், ரூ.1,000 செலுத்தி நூலகப் புரவலராக இணைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.