தடுப்புச் சுவர் மீது மோதிய லாரி: வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை மலைப் பாதையில் தடுப்புச் சுவர் மீது லாரி மோதி நின்றதால், அச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

வால்பாறை மலைப் பாதையில் தடுப்புச் சுவர் மீது லாரி மோதி நின்றதால், அச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
கோவையில் இருந்து வால்பாறையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைக்கு மரத் தூள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை காலை லாரி வந்து கொண்டிருந்தது.
1-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலைத் தடுப்புச் சுவர் மீது லாரி மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக பள்ளத்தில் கவிழாமல் லாரி நின்றுவிட்டது. இதையடுத்து, பொக்லைன் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதனால், வால்பாறை சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com