வால்பாறை மலைப் பாதையில் தடுப்புச் சுவர் மீது லாரி மோதி நின்றதால், அச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
கோவையில் இருந்து வால்பாறையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைக்கு மரத் தூள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை காலை லாரி வந்து கொண்டிருந்தது.
1-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலைத் தடுப்புச் சுவர் மீது லாரி மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக பள்ளத்தில் கவிழாமல் லாரி நின்றுவிட்டது. இதையடுத்து, பொக்லைன் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதனால், வால்பாறை சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.