பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரி நாளை தொடக்கம்

பொள்ளாச்சியில் அரசு கலைக் கல்லூரி தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை நடைபெறவுள்ளது.

பொள்ளாச்சியில் அரசு கலைக் கல்லூரி தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை நடைபெறவுள்ளது.
பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முயற்சியின் பேரில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி, பொள்ளாச்சியை அடுத்த சமத்தூர் ராமஐயங்கார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமையவுள்ளது.
இங்கு, பி.ஏ. ஆங்கிலம்,  பிபிஏ, பிஎஸ்சி கணிதம், பி.காம்., சி.ஏ., பிகாம், பி.ஏ., ஆகிய வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரி தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெறவுள்ளது.
இவ்விழாவில்,  சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி, மக்களவை உறுப்பினர் மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரிவாசு உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com