டெங்கு காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் 49 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு இருவரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு 162 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமித் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, டெங்கு காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் 49 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு இருவரும், சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு 162 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.