கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1.47 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 33-ஆவது வார்டு, காளப்பட்டி, அசோகா நகர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 23.43 சென்ட் நிலம் இடம், மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 16-ஆவது வார்டு, வடவள்ளி,
ஜி.பி.கார்டன் பகுதியில் உள்ள 13.68 சென்ட் நிலம், வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 43-ஆவது வார்டு, வெள்ளக்கிணறு, அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள 75.70 சென்ட் நிலம், தெற்கு
மண்டலத்துக்கு உள்பட்ட 87-ஆவது வார்டு, குனியமுத்தூர், பாரதி நகர் பகுதியில் உள்ள 6 சென்ட் இடம், மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 48-ஆவது வார்டு, கணபதி, செல்வகுமாரசாமி நகர் பகுதியில் உள்ள 28 சென்ட் நிலம் என மொத்தமாக 1.47 ஏக்கர் பரப்பளவிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.