புஜங்கனூர் ஸ்ரீ விநாயகா வித்யாலயத்தில் விழா

காரமடையை அடுத்த புஜங்கனூர் ஸ்ரீ விநாயகா வித்யாலய சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவியரிடம் புதைந்துக் கிடக்கும் பல்வேறு

காரமடையை அடுத்த புஜங்கனூர் ஸ்ரீ விநாயகா வித்யாலய சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவியரிடம் புதைந்துக் கிடக்கும் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் வெர்சடைல் வார விழா நிகழ்ச்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் நிர்மலா தேவி, முதல்வர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோமதி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற வார விழாவில் மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் திறன்களை வெளிப்படுத்தும்வகையில் மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, மனனப் போட்டி, அறிவியல் மாதிரி வடிவமைத்தல், வார்த்தை விளையாட்டு, நடனப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. 
இதில் பள்ளியைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.  வெற்றி பெற்ற 75 மாணவ,மாணவியருக்கு பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பேரவைத் தலைவர் இந்திரஜித் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com