ஆயுர்வேத சிகிச்சைக்காக ஓ.பன்னீர்செல்வம் கோவை வருகை

ஆயுர்வேத மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக திங்கள்கிழமை கோவை வந்துள்ளார்.

ஆயுர்வேத மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக திங்கள்கிழமை கோவை வந்துள்ளார்.
 அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார்.
 இந்நிலையில், ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை கோவை வந்தார்.
 பின்னர், ராமநாதபுரத்தில் உள்ள ஆரிய வைத்ய பார்மஸியில் பரிசோதனைகள் மேற்கொண்டார்.
 தொடர்ந்து, மருத்துவமனையிலேயே தங்கி அவர் சிகிச்சை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், ஏற்கெனவே மே 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இங்கு தங்கி சிகிச்சை பெற்றுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com