இரண்டு வீடுகளில் 18 பவுன் திருட்டு

கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
 இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
 கோவை, பீளமேடு, பாலகுரு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கே.கார்த்திகேயன் (33). இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.  இவர், ஜூன் 16-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு ஈரோடு சென்றுவிட்டார். மீண்டும் 18-ஆம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
 வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ. 12 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
 மற்றொரு சம்பவம்:
 கோவை, சேரன் மாநகரைச் சேர்ந்தவர் அறிவழகன் (33). இவர், ஜூன் 15-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு பெங்களூரு சென்றுவிட்டார். மீண்டும் அவர் ஜூன் 18-ஆம் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
 இச்சம்பவங்கள் குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com