கோவை விமான நிலையத்தில் விபத்து அவசர உதவிப் பயிற்சி ஒத்திகை

கோவை விமான நிலையத்தில் கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் விபத்து நேரத்தில் அவசர உதவி அளிப்பது குறித்த பயிற்சி ஒத்திகை அண்மையில் நடைபெற்றது.

கோவை விமான நிலையத்தில் கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் விபத்து நேரத்தில் அவசர உதவி அளிப்பது குறித்த பயிற்சி ஒத்திகை அண்மையில் நடைபெற்றது.
 கோவை சர்வதேச விமான நிலையத்தில் கே.எம்.சி.எச். மருத்துவமனை, காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் விமான நிலைய நிர்வாகம் ஆகியன இணைந்து விபத்து காலத்தில் அவசர உதவிகள் அளிப்பது குறித்த பயிற்சி ஒத்திகையை நடத்தின. இதில், விமானத்தில் விபத்து ஏற்பட்டால் அதனால் உருவாகும் அவசர நிலையை எதிர்கொள்ளும் வகையில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
 அப்போது, விபத்தில் சிக்கியதாக 75 மாணவர்களை எவ்வாறு காப்பற்றுவது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், கே.எம்.சி.எச். மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com