சூலூர் அருகே நீலாம்பூரில் வசிக்கும் அருந்ததியினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம், விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மெளனசாமி, சூலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சூலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.