அன்னூர் அருகே உள்ள குளத்தில் அனுமதியின்றி இரவு நேரத்தில் மண் அள்ளுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அன்னூர் பேரூராட்சி, குமாரபாளையத்தில் சொக்கம்பாளையம் செல்லும் வழியில் பேரூராட்சிக்கு சொந்தமான மயானத்துடன் கூடிய குளம் உள்ளது. இந்தக் குளத்தில் உரிய அனுமதியின்றி இரவு நேரத்தில் லாரிகள் மூலமாக மண் அள்ளப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும், மீண்டும் மண் அள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.