கோவையில் பரவலாக மழை

கோவையில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

கோவையில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
கோவை மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த சில நாள்களாக அதிக வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை பரவலாக குளிர்க் காற்று வீசியது. பின்னர், மாலை நேரத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.  
மேலும் நகரின் மையப் பகுதியில் உள்ள பல பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதையில் மழை நீர் சூழ்ந்தது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. இந்த மழையால் உஷ்ணம் குறைந்த குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com