வழிப்பறி: இளைஞருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

பொள்ளாச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவர், 2013-இல், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த பொள்ளாச்சி, ஊத்துக்காடு சாலையைச் சேர்ந்த ரமேஷ்குமார் (39) என்பவர் குமரவேலிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500 வழிப்பறி செய்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு பொள்ளாச்சி நீதித் துறை நடுவர் மன்றம் 1-இல் நடைபெற்றுவந்தது. அதில், ரமேஷ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com