பொள்ளாச்சி அருகே மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த டி.கோட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார் (29). இவர் திருப்பூரில் தனியார் நிறுவன மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். பொள்ளாச்சி நாச்சிமுத்துக்கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் மாரித்து (30). பொள்ளாச்சி தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நண்பர்களான இருவரும், வடக்கிபாளையம் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அ.சங்கம்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில், பாலத்திலிருந்து கீழே விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலூகா போலீஸார் விசராணை நடத்தி வருகின்றனர்.