சூலூர் அருகே மின்சரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்.
சூலூர் அருகே உள்ள செங்கோடகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் சுரேஷ்குமார்(28). இவர், வீட்டில் மின் விளக்கு பொருத்தும்போது மின்சாரம் பாய்ந்து செப்டம்பர் 30-ஆம் தேதி பலத்த காயமடைதார்.
அவருக்கு கோவை தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து, சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.