மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

சூலூர் அருகே மின்சரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்.

சூலூர் அருகே மின்சரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்.
சூலூர் அருகே உள்ள செங்கோடகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் சுரேஷ்குமார்(28). இவர், வீட்டில் மின் விளக்கு பொருத்தும்போது மின்சாரம் பாய்ந்து செப்டம்பர் 30-ஆம் தேதி  பலத்த காயமடைதார்.
அவருக்கு கோவை தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால்,  அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து, சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com