நெகமம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் அடிபட்டு உயிரிழந்தனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் பசீர் மகன் முகமதுஹரிஷ் (17), அதே ஊரில் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் இப்ராஹிம்ஷா மகன் ரியாஸ்கான் (17). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வால்பாறை சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, காட்டம்பட்டி அருகே கள்ளிமடைப் பிரிவு பகுதியில் இந்த இருசக்கர வாகனம் மீது எதிரே வந்துகொண்டிருந்த லாரி மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த நண்பர்கள் இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இது குறித்து நெகமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.