அஞ்சல் துறை ஊக்கத் தொகைக்கு  விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்திய அஞ்சல் துறை ஊக்கத் தொகை அளிக்கிறது.

அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்திய அஞ்சல் துறை ஊக்கத் தொகை அளிக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், முந்தைய இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள், பள்ளியில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு சங்கம் அல்லது தனிப்பட்ட முறையில் அஞ்சல் தலை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஊக்கத் தொகை பெறத் தகுதியானவர்கள். இதற்கான விண்ணப்பங்களை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் தலை தொடர்பான விநாடி விநா, அஞ்சல் தலை சேகரிப்பில் அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர் என்று மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com