அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினர் கேக் வெட்டி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, கேக் வெட்டி கொண்டாடினர். கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பி.எஸ்.சரவணக்குமார், நிர்வாகிகள் வீனஸ் மணி, மகேஷ்குமார், கணபதி சிவகுமார், வழக்குரைஞர் கருப்பசாமி, கோவை போஸ், வசந்த், ராமநாகராஜ், காட்டூர் சோமு, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் குமரேசன், ராம்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.