வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

எலக்ட்ரீஷியன் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரைப் பவுன் நகை , பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக

எலக்ட்ரீஷியன் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரைப் பவுன் நகை , பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  போத்தனூர் அருகேயுள்ள கல்பனா தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (54). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வருகிறார். துடியலூரில் உள்ள  தனது உறவினர் வீட்டுக்கு செல்வக்குமார் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை சென்றிருந்தார்.
  பின்னர், அவர்கள் சனிக்கிழமை மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பீரோவில் இருந்த  ஐந்தரைப் பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.    இது குறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com