துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் இயங்கி வரும் பிளக்ஸ் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (பிப்.17) நடைபெறுகிறது.
இதில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், இன்ஸ்ரூமெண்டேஷன் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஸ்ரூமென்டேஷன் துறைகளில் பாலிடெக்னிக் பாடத் திட்டத்தில் ஐந்தாம் பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் கல்லூரி அடையாளச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐந்தாம் பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். மேலும் தகவல்களுக்கு கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் மோகன்குமாரை 9944197932 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.