கோவை எஸ்பி அலுவலகத்தில் காவல் துறை 3டி இலச்சினை திறப்பு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல் துறையின் 3டி இலச்சினை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல் துறையின் 3டி இலச்சினை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை ரயில் நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அலுவலகத்தின் முகப்பை பொலிவுபடுத்தும் வகையில் வரையப்பட்ட 3டி இலச்சினையை காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி திறந்துவைத்தார். இலச்சினையின் நடுவே உள்ள சிங்கத்தின் கண்கள் அனைத்து கோணங்களையும் பார்க்கும் வகையிலும், மொத்த இலச்சினையும் புடைப்புச் சித்திரம் போலவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com