கோவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் கே.அர்ச்சுணன் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற அக்கட்சி நிர்வாகிகள், அவிநாசி சாலையில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுசாமி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலர் பப்பாயா ராஜேஷ், ராமநாதபுரம் பகுதி செயலர் டி.ஜே.செல்வகுமார், 51-ஆவது வார்டு செயலர் எஸ்.ஜே.அசோக்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநகர் மாவட்ட இணைச் செயலர் ஏ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அதிமுகவினர் கொண்டாடினர். இந்த விழாவின் ஒரு பகுதியாக வரும் மார்ச் 4-ஆம் தேதி கட்சி அலுவலக்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.