தேசிய அளவில் சிறந்த என்.சி.சி. மாணவியாக தேர்வு செய்யப்பட்டவருக்குப் பாராட்டு

அகில இந்திய அளவில் சிறந்த என்.சி.சி மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம் விருது பெற்ற ஆலாங்கொம்பு ஸ்ரீ சரஸ்வதி வித்யாமந்திர் சிபிஎஸ்இ பள்ளி

அகில இந்திய அளவில் சிறந்த என்.சி.சி மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியிடம் விருது பெற்ற ஆலாங்கொம்பு ஸ்ரீ சரஸ்வதி வித்யாமந்திர் சிபிஎஸ்இ பள்ளி மாணவி ஜே.ஒய் மதுநிஷாவுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் சார்பில், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் சுந்தரகணேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் சித்துராம்பாபு முன்னிலை வகித்தார்.
இதில், ரோட்டரி மாவட்ட இளைஞர் சேவை பிரிவு இயக்குநர் சந்திரன் சிறப்பாளராகப் பங்கேற்று தேசிய அளவில் சாதனை படைத்த மாணவி மதுநிஷாவுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் மருத்துவர் இஸ்மாயில், மெட்ரோ பள்ளித் தாளாளர் நாகராஜன், பள்ளிக் குழுத் தலைவர் பாலகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், சங்க முன்னாள் தலைவர்கள் ஸ்டீபன், நாகராஜ், கேப்டன் துரை, சாய்ராம் துரைராஜ், மருத்துவர் அரவிந்த் கார்த்திகேயன், என்சிசி பயிற்சியாளர்கள் ஸ்ரீதர், அனு உள்பட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். ரோட்டரி செயலர் மருத்துவர் விஜயகிரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com