சூலூர் அருகே மயங்கி விழுந்தவர் சாவு

சூலூர் அருகே திங்கள்கிழமை மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

சூலூர் அருகே திங்கள்கிழமை மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் மகன் ஆனந்தன் (44).  இவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக உக்கடத்திலிருந்து பேருந்தில் இடையபாளையம் பகுதிக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். 
பேருந்தில் இருந்து இறங்கும்போது அவர் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.   தகவலின்பேரில் அங்கு வந்த  108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மருத்துவர்,  பரிசோதனை மேற்கொண்டதில் அந்த நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.  சூலூர் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com