கிணத்துக்கடவு கிட்ஸ் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே திறனாய்வு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
போட்டிகளைப் பள்ளித் தாளாளர் டி.எல்.சிங் துவக்கிவைத்தார். கராத்தே பயின்றுவரும் மாணவர்களின் திறன்களை வாமதேவா அகாதெமியின் மார்சியல் ஆர்ட்ஸ் தலைவரும், தலைமைப் பயிற்சி ஆசிரியருமான ராஜன் பரிசோதித்தார். போட்டியில் 6 மாணவர்கள் கருப்பு பட்டை பெற்றனர். மீதமுள்ள மாணவர்கள் வெவ்வேறு வகையான பட்டைகளை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், கராத்தே பயிற்சி ஆசிரியர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.