பொள்ளாச்சி பிஏ பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கலைத்திறன் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். பி.ஏ.கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதுபோன்று, கல்வியிலும் சிறந்துவிளங்கவேண்டும். கற்கும் பாடங்களைப் புரிந்துபடிக்கவேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் பங்கேற்று பேசினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில், நிர்வாக அலுவலர் பழனிசாமி, பி.ஏ. கல்வியியல் கல்லூரி முதல்வர் சந்திராதேவி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பொன்னம்பலம், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் விஜய்பிரவின் நன்றி கூறினார்.