வால்பாறை நல்லமுடி காட்சிமுனைக்கு செல்ல தடை

கோவை மாவட்டம்,  வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலமான  நல்லமுடி காட்சிமுனைக்கு செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

கோவை மாவட்டம்,  வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலமான  நல்லமுடி காட்சிமுனைக்கு செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
வால்பாறையை அடுத்துள்ளது நல்லமுடி எஸ்டேட்.  இங்கு அமைந்துள்ள காட்சிமுனைப் பகுதி வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நுழைவுக் கட்டணம் செலுத்தி ரசீது பெற்ற பின்பே இங்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  அப்பகுதியை சுற்றியுள்ள வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் காட்சிமுனைப் பகுதிக்கு வந்து செல்வதை வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். 
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி  மறு அறிவிப்பு வரை அப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com