வால்பாறையில் தொடர் மழை

வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வறட்சி நிலவியதால் அனைத்து ஆறுகளும் வறண்டன.  நீர்வரத்து இன்றி சோலையாறு அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது. வெப்பம் தொடர்ந்து அதிகரித்து இருந்ததால் தேயிலை உற்பத்தியும் வெகுவாக பாதித்தது.  இந்நிலையில்,  வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com