வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வறட்சி நிலவியதால் அனைத்து ஆறுகளும் வறண்டன. நீர்வரத்து இன்றி சோலையாறு அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது. வெப்பம் தொடர்ந்து அதிகரித்து இருந்ததால் தேயிலை உற்பத்தியும் வெகுவாக பாதித்தது. இந்நிலையில், வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது.