துடியலூரை அடுத்த காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு சோமையம்பாளையம் திமுக கிளை சார்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஆசிரியை வனஜாகுமாரி முன்னிலை வகித்தார். சோமையம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், திமுக ஊராட்சிச் செயலாளருமான ஆனந்தகுமார் தலைமை வகித்து, இப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், பாய் விரிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் பொ.ராமலிங்கம், மாணிக்கம், குமாரலிங்கம், கந்தசாமி, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.